Tuesday, March 01, 2005

NASAமாய் போனது!

கொஞ்ச நாளுக்கப்பறம் இணைய உலாவந்தபோது உத்தர் பிரதேஷின் பல்லியா என்ற கிராமத்தைச் சேர்ந்த சவுரப் சிங் என்ற 15-வயது மாணவன் NASA நடத்திய அறிவியல் போட்டியில் முதலிடம் வாங்கிய செய்தியை படித்தேன். (இதற்கு முன்னர் அப்துல் கலாமும், கல்பனா சாவ்லாவும் இதே போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார்களாம்). பையன் கலக்கிட்டான் என்று நினைத்துக்கொண்டேன். இந்த சவுரப் சிங் செய்தி உண்மையில்லை என்றவகையில் செய்திகள் வரத்துவங்கின. NASA இந்த வகையில் எந்த ஒரு போட்டியும் நடத்தவில்லை என மறுத்ததாக rediff செய்தி வெளியிட்டது. இந்த நிலையில், தான் Oxford சென்று இந்த பரிட்ச்சையில் கலந்து கொண்டதாகவும், அவர்கள் அளித்த சான்றிதழ் ஒன்றையும் சவுரப் காண்பித்துள்ளான். NASA என்ற பெயர் போர்வையில் வேறு ஏதோ ஒரு நிறுவனம் செய்த சதி போலத்தான் எனக்கு தோன்றுகிறது. இந்த சதியில் சவுரப் மற்றும் குடும்பத்தாரின் பங்கு உண்டா என்பது கேள்வி. அவர்களும் இந்த சதியில் ஏமாந்தவர்கள் என்றே நினைக்கிறேன்.




இப்படிப்பட்ட செய்தியை நம்பி ஏமாந்து கலாம் வாழ்த்துச் செய்தி அனுப்பினார் (??) என்பதை நினைக்கையில் சிரிப்பு தான் வருகிறது.

சமீப காலமாக இந்தியா பற்றிய ஃபீல் குட் செய்திகளை செய்தி ஊடகங்களில் நிறைய காண முடிகிறது. New Scientist கூட சென்ற வார இதழில் இந்தியா பற்றிய சிறப்புப் பார்வையை வெளியிட்டிருந்தது. ஆனால், இந்தியாவோ/இந்தியர்களோ மேற்கத்திய நாடுகளின் அங்கீகாரம் கிடைத்துவிட்ட பெருமைபோதையில் மயங்கிவிடாமல், சுயசோதனைமுறையில் கவனம் செலுத்துவது அவசியம்.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

2 Comments:

Anonymous Anonymous said...

Yes couldnt agree more.
At the same time our news media is also exposed again.
They dont verify news properly but get readers attention at any cost, that includes publishing rubbish or untrue information.

1:57 PM  
Anonymous Anonymous said...

feel good... இது BJP யின் கைவரிசை. மகாஜன் மகாஜனங்களுக்கு சொன்ன கதை நினைவுக்கு வருகின்றது...
;)

2:05 PM  

Post a Comment

<< Home

Counter