Friday, October 29, 2004

நாக்பூரில் மனித உரிமை மீறல்

நாக்பூர் தோல்விக்குபிறகு வரக்கூடிய செய்திகள்:

நாக்பூர் ஆடுகளமேலாளர் சிட்னி ஆடுகளமேலாளராக நியமனம்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு.

நாக்பூரில் கில்கிரிஸ்டுக்கு சிலை மற்றும் பாராட்டு விழா: விதர்பா கிரிக்கெட் சங்கம் முடிவு.

Zee/ESPN கோர்ட் வழக்கு வாபஸ்: இருநிறுவனங்களும் கிரிக்கெட் ஒளிபரப்பு செய்ய மறுப்பு.

BCCI தலைவர் பதவியை ஷரத் பவாருக்கு விட்டுக்கொடுக்கத் தயார்: மகேந்திரா

நாக்பூரில் ஆஸ்திரேலியா இந்திய அணியை கோழி அடிதாற்போல் தோற்கடித்தது மனித உரிமைமீறல்: சென்னை வழக்கறிஞர் வழக்கு

சீன கிரிக்கெட் அணிக்கு ஐசிசி முழுஅந்தஸ்து: இந்திய தோல்வி எதிரொலி

மும்பை ஆடுகளத்தில் ஆடுமாடுகளை அனுப்பி புல்லை மேயவிடவேண்டும்: கங்குலி கோரிக்கை.

மும்பை ஆடுகளத்தை சிவசேனைக் குழு மேற்பார்வையில் தயார்செய்ய வேண்டும்: கவாஸ்கர் கருத்து

மும்பை டெஸ்ட் அணித்தேர்வில் குழப்பம்: இந்திய வீரர்கள் பார்திவ் படேல் இல்லாமல் விளையாடமாட்டோம் என அறிவிப்பு.

பிரெட் லீ இந்திய அணியில் சேர்ந்தாரா? மும்பையில் பரபரப்பு. டிக்கெட் விற்பனை 300% அதிகரிப்பு
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

1 Comments:

Blogger Kannan said...

இரவிக்குமார்!

உங்கள் பதிவுகள் படிக்கச் சுவையாக உள்ளது. தின வாந்தி நின்னு போச்சா? ரொம்ப நாள் கழித்து இப்பொ தான் இங்க பின்னூட்டம் கொடுக்க முடிந்தது.

வாழ்த்துக்கள்,
கண்ணன்

11:46 AM  

Post a Comment

<< Home

Counter