Saturday, October 09, 2004

கிரிக்கெட்: திருந்தாத ஜென்மங்கள்

நினைத்தபடியே பெங்களூரில் சரியான உதை வாங்க தயாராகிவிட்டது நமது அணி. முதல் இன்னிங்ஸில் ஆடியதை விட இன்னும் மட்டமாக தங்களால் ஆட முடியும் என நிரூபிக்கும் வகையில் இன்று ஆட்டம் போட்டார்கள் நம் திருவாழத்தான்கள்.

முதல் மூன்று விக்கெட்டும் ஆஸ்த்ரேலிய அணி பந்து வீச்சாளர்களுக்கு கிட்டவில்லை. சேவாக் விக்கெட் அம்பயர் பில்லி பொவ்டனுகும், சோப்ரா விக்கெட் அம்பயர் ஸ்டீவ் பக்னர்ருக்கும் கங்குலி விக்கெட் ரன் அவுட்டாகவும் கிடைத்தது. நான் முன்பே கூறியது போல சோப்ரா இனியும் இந்த ஆஸ்திரேலிய அணியிடம் சோபிக்க முடியாது என்பது தெளிவாகிவிட்டது. அவரை மூட்டை கட்டி வீட்டுக்கு அனுப்ப வேண்டியது மட்டுமே பாக்கி.

கங்குலி ஆட்டம் இழந்த விதம் ஒன்றை வெட்டவெளிச்சமாகியுள்ளது. அவருக்கு உயர எழும்பும் பந்தை ஆடுவதற்கு சரிவர வராது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், இதை சரிசெய்ய அவர் ஏதும் ஆட்ட மாற்றங்களை செய்ததாக தெரியவில்லை. மாறாக, அவர் வேகப் பந்து வீச்சாளர்களை சந்திக்கும் பொழுது, எப்படியாவது நான் - ஸ்ட்ரைக்கர் என்ட்டுக்கு செல்லுவதில் தான் அதிக கவனம் செலுத்துகிறார். சமீபத்தில், இங்கிலாந்தில் நடந்த ஒரு நாள் ஆட்டத்தில், ஹார்மிசன் பந்து வீசிய போது, அரக்க பறக்க ஒரு ரன்னை எடுக்கப்போய், லட்சுமண் மீது மோதி, அசடு வழிய பெவிலியன் திரும்பினார். இன்றும், அதே மாதிரி, இல்லாத ஒரு ரன்னை எடுக்கப்போய், வீனாக ஆட்டம் இழந்தார்.

நேற்று நான் கூறியது போல், லட்சுமணன் இன்னும் நாலு-அல்லது-ஐந்து இன்னிங்ஸ் பிறகு தான் ஒரு நல்ல இன்னிங்ஸ் ஆட வாய்ப்பு உள்ளது. யுவராஜ் சிங், தானே ஏதாவது அடிபட்டுக்கொண்டு, அடுத்த சென்னை ஆட்டத்தில் ஆடாமல் இருப்பது நம் நாட்டுக்கு நல்லது (ஏனென்றால், இவர்களையெல்லாம், எதோ அரசு ஊழியர்கள் போல், BCCI ஒவ்வோரு ஆட்டத்திலும் ஆட விடுகிறார்கள் - ஒரு வேலை, இவர்களுக்கு பென்ஷன் கூட கொடுப்பார்கள் போல!)

இந்த ஆட்டத்தின் ஒரே சந்தோஷம், ஹர்பஜன் சிங்கின் பந்து வீச்சு. நாளை மழை பெய்து ஆட்டம் தடைபட்டால் ஒழிய, வேறு எந்த 'miracle'லும் நடக்க வாய்ப்பு இல்லை. ராகுல் ட்ராவிட் கொஞ்சம் காட்ஜ் அடித்து தன் ஆட்டத்தை improve செய்வார் என நம்புகிறேன்.

பட்டை நாமத்துடன், அதன் அவல ரசிகர்களும் (நான் உட்பட) சென்னையிலாவது நம் மானத்தை காப்பாற்றுவார்கள் என்ற (அவ)நம்பிக்கையில் ஆஜர் ஆவோம். நம் அணியை திருத்துவது இருக்கட்டும், நாம் எப்போது திருந்துவோம்?!!
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

2 Comments:

Blogger kirukan said...

முதலில் இப்படி கிரிக்கெட்டைப் பத்தி எழுதுவதையும் பேசுவதையும் நாம் நிறுத்த வேண்டும். அப்போ தான் இந்தியா உருப்படும்.

9:54 PM  
Blogger Arun Vaidyanathan said...

Ganguly paththina comment ..nach :) :) :)
We will come back..dont worry!

6:56 PM  

Post a Comment

<< Home

Counter