Tuesday, October 12, 2004

கல்லூரி வாசல்

புதிதாக கல்லூரியில் நுழைந்த அந்த முதல் ஒரிரு மாதங்களை என்னால் மறக்க முடியாது. ஒவ்வொரு நாளும் ஒரு புது வித அனுபவமாக இருந்தது. ஆனாலும், ஒரு பயம் இருக்கத்தான் செய்தது: 'ராகிங்'. அதுவரை காதளவில் கேள்விப்பட்ட ஒன்றை நேரில் சந்திக்கும் போது ஒருவித கிலி வரத்தான் செய்தது. பஸ்சை விட்டு இறங்கி கல்லூரி வாசலில் நுழையும் முன்பு, first years யாராவது தென்பட மாட்டார்களா என்று கண்கள் தேடும். யாரும் இல்லையென்றால், அய்யோ இன்னைக்கு யார் கிட்ட தனியா மாட்டிப்போமோ என்ற பயத்தோடு அரக்க பறக்க lecture hall நோக்கி கால்கள் ஓடும்.

"டேய்...இங்க வாடா!" இந்த குரலைக் கேட்டால் என் இதயத்துடிப்பு எலெக்ட்ரிக் டிரைன் வேகத்தில் செல்லத் தொடங்கும்.

"பேர் என்னடா"

"....."

"என்ன ஊமையா"

"....-ஸார்..." நான் சொல்லி முடிப்பதற்க்குள்,

"டேய் அதோ ஒரு சிட்டு போவுதே..அது first yearஆ?"

"...தெரியாது"

"போய் கூட்டிகிட்டு வாடா"

அதற்குபின் நான் ஒரு spectator தான்.

அவர்கள் ஒவ்வொருவரும் அவளிடம் கொஞ்சி கொஞ்சிப் பேச, அவர்கள் அடிக்கும் மட்டமான ஜோக்குகளுக்கு சிரித்து...சில சமயங்களில் நெலிந்து...அழாத குறையாக... "ஒடுடா" என்ற குரல் கேட்டவுடன்....தலை தெறிக்க ஒடிய அனுபவங்கள் பல!!

என் கதையை விட ஹாஸ்டல் கதைகள் இன்னும் மோசமானவை. சீனியர்களுக்கு பணிவிடை செய்வதிலிருந்து (சிகரெட், பீர் உட்பட) சில வக்கிரமான மூடர்களிடம் சிக்கி, சொல்லக் கூசும் விஷயங்களை செய்து...தூக்கமின்றி அடுத்த நாள் lecture hall'ல் தூங்கி...இவர்கள் படும் பாட்டை பார்த்தால், இவர்களுக்கு நாம் எவ்வளவோ தேவலை என்று தோன்றும்.

கட்டாயம் நாம் இந்த மாதிரி ஏதும் செய்யக்கூடாது என்று அன்று நினைத்தாலும், நான் சீனியரானபின், harmless ராகிங் என்னும் சாக்கை வைத்துக்கொண்டு நானும் ஒரிரு அல்ப ராகிங்க்கு துணை போனதுண்டு. ஆனால், கடந்த சில வருடங்களாக கல்லூரிகளில் நடந்தேறும் ராகிங் சம்பவங்களை படிக்கும் போது என் மனதில் ஒருவித குற்ற உணர்வு வரத்தான் செய்கிறது. சமீபத்தில், கிழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் நடந்த ஒரு சம்பவத்தில், "ஸார்" என்று கூப்பிடாத மூன்றாம் வருட மாணவர்களை ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் அடித்து விட்டனர். ராகிங் என்ற போர்வையில் இங்கு நடைபெற்றது ego clash தான்.

இதை விட கொடூரமான ராகிங் கதை சில வருடங்களுக்கு முன்னர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்தது நினைவிலிருக்கலாம். ராகிங் மூலம் மாணவர்களுக்கிடையே ஒருவித நட்புப் பினைப்பு ஏற்படுகிறது என்ற வாதத்தை இனிமேலும் ஏற்க முடியாது. இதற்கு முடிவு காணும் வகையில், தமிழக மருத்துவக் கல்லூரிகளில் ராகிங் தடுப்பு குழுமங்கள் நிறுவப்பட்ட செய்தி சற்று நெகிழ்வைத் தருகிறது. ராகிங்கை ஒழிக்கும் ஆயுதம் மாணவர்களிடம் தான் உள்ளது. இனிமேலும் இந்த காட்டுத்தனமான நிகழ்வுகள் நடக்காமல் இருக்கட்டும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home

Counter